பெண்ணுக்கு பெண்ணே இழிவினை தவிர்ப்போம்.
பெண்சிசுக் கொலையினை அறவே தடுப்போம்.
இரு மனம் இணைந்தால் திருமணம் முடிப்போம்.
போகப்பொருளாய் காட்டுவதை எதிர்ப்போம்.
பெண்ணுக்கு துணையாய் தோள்தனைக் கொடுப்போம்.
பிறப்பின் நிலையை இருவருக்கும் சொல்வோம்.
பெண்ணினம் நினைத்தால் நிகழ்த்திக் காட்டலாம்.
இன்றே எடுப்போம், உறுதியினைக் கொள்வோம்.
--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏
No comments:
Post a Comment