ஓ....... குட்டிக்கவிதைகள்
இவன்
மறந்து போன
கவிதையை,
மீண்டும்
எழுத துடிக்கிறான்
###############
இதயத்தில் குடி வைக்க
முயல்கிறேன்,
உன்னை
எழுத்தில் சிறைப்பிடித்து.
*********************
ஏனோ
சமிக்கைகள்
செயலற்று போகிறது
தேவைபடும்
சமயத்தில்.
+++++++++++++++
"நீச்சல் "
அனுபவம்
மறந்து
கத்துக்குட்டியாய்
~~~~~<~~~~~~~~
"யோசனை"
ஓரெழுத்து எழுத
ஓராயிரம்
><><><><><><><
"போட்டி"
உருட்டி பார்க்க
பகடைக்காய்
உங்களுக்கும்
எனக்குமா?
^^^^^^^^^^^^^^^^^
"உயிர்"
கல், மண்னென
அத்தனைக்கும்,
உன் வாயிலிருந்து
உதிரும்போது
=================
"புரியாமல்"
மாடிப்படி, மலைப்படி
அப்படி, இப்படி
அதிலொன்று தானோ?
மண்டகப்படி
^^^^^^^^^^^^^^^^^
உணர்வுகளுமில்லா,
உற்சாகமில்லா
உன் அணைப்பில்
தெரிகிறாய்
"தானியங்கியாய்"
)()()()()()()()()()()()()()()()()()(
ஓ....
இப்படியும் ஒரு பாடமா?
இருக்கிறதா படிக்க?
ஆக்கம்:
உங்கள் தவப்புதல்வன்
No comments:
Post a Comment