இன்னும் எத்தனையோ…
++++++++++++++++++++++
வாழ்வில் எத்தனையோ புதுமையை ஏற்றோம்
குடும்ப உறவில் பழமை வேண்டும்.
அறியாத மனநலம் அதிலே இருக்கு.
உணவின் சுவையும் கலந்தே இருக்கு.
உறவின் மேன்மை அறிந்தலில் இருக்கு.
ஒற்றுமை மகிமையை அறியாமல் அழித்தோம்.
பகைவர் நுழைந்திட வழியினைக் கொடுத்தோம்.
கரையானாய் அரித்து பலத்தினை இழந்தோம்.
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
இது இணைப்பாக, ரசிக்க மட்டும்:-
உரைத்திட இன்னும் எத்தனையோ இருக்கு.
எனக்கென கட்டுப்பாடு ஒன்றென இருக்கு.
நட்புகள் அனைவருக்கும் அனுபவங்கள் இருக்கு.
நடுவருக்கு இதிலே உரிமை இருக்கு.
தலைமையும் அதிலே உறுதியா இருக்கு.
நிறையவே அதிலே உண்மையும் இருக்கு.
ஏற்று நடந்தால் மதிப்பும் இருக்கு.
ஏற்காமல் இருந்தால் இகழ்ச்சியும் இருக்கு.
ஒற்றுமையாய் உழைத்தால் உயர்வும் இருக்கு.
புகழ்வில் நமக்கு மகிழ்வும் இருக்கு.
வெற்றி நமது உழைப்பில் இருக்கு.
No comments:
Post a Comment