ஒன்றிலே முத்து உதிர,
இரண்டிலே சொல்லுதிர,
அளவிலா ஆனந்தத்தில்
ஆடியதே எம் இதயம்.
அழகுநடை பயின்ற நீ,
குடுகுடு ஓட்டம் கொண்டாய்.
குட்டிக்கரணம் போட்டுக் காட்டி
குதுகலிக்க செய்து விட்டாய்.
குறும்புகளோ, அரும்புகளிலிருந்து
மொட்டுக்களாய் பரிமளிக்க,
நட்பும் உறவும் நமதென்றே
மகிழ்வுடனே உறவாடு.
நீயும் விரைவாய் கற்றுப் பழகு,
ஆனந்தம் மேலும் கூடி வர.
நாட்களும், நலனும் சேர்ந்த அனைக்க,
நினைவுகளும் தொடரட்டும் மகிழ்வாக,
வாழ்த்துகளைப் பகிர்ந்தோமே அன்புடனே ,
வழங்கினோமே ஆசிகளை பாசமுடனே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எங்கள் இனிய பேத்தியே. [சாதனா }
என்றுமே உன்
தாத்தா,பாட்டி.
No comments:
Post a Comment