Translate

Wednesday, December 19, 2007

இறைவனாய் நினைத்து

புரிதல் இல்லை
நமக்குள்ளே
அதனால்
என்னுடையது
என்னிடமும்,
உன்னுடையது
உன்னிடமும்.

உனது உயர்ந்தது
எனது தாழ்ந்ததென்று
போடாதே தவறாக
அன்பு கணக்கை.

புரிதல் இருப்பின்
நமைக் காத்திடுவோம்
ஒருவரை ஒருவர்
அரவணைத்து.

கோபப்படுகிறாய்
காக்கும் இறைவனாய்
எனை நினைத்து.

அன்பினால் உனை
கட்ட முடியவில்லை
மனிதனாய் இருந்தும்.

No comments: